யாழில் இளம் குடும்பப் பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
கலைவாணி வீதி, வடலியடைப்பு, பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பாலச்சந்திரன் சங்கீதா என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வருகின்ற நிலையில், அந்த பெண், அடகு வைத்த நகைகளை மீட்கும் நிதி நிறுவனம் ஒன்றிடம் ஒரு தொகை பணத்தை பெற்றுக்கொண்டு, நகையை மீட்பதற்காக சென்றுள்ளார்.
இருப்பினும், அந்த பெண்ணின் தொலைபேசி இயங்காத நிலையில், அந்த நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று பார்த்தவேளை அவர் தவறான முடிவெடுத்த நிலையில், காணப்பட்டுள்ளார்.
இதன்போது, அங்கு வந்த அயலவர்கள், நிதி நிறுவன ஊழியர்களின் நெருக்கடியால் தான் குறித்த பெண் தவறான முடிவெடுத்துள்ளதாக நினைத்து நிதி நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த ஒரு ஊழியர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், பெண்ணின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
