முல்லைத்தீவில் கிணற்றிற்குள் வீழ்ந்த காட்டுயானை
முல்லைத்தீவு -ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட ஒதியமலை கிராமத்தில் விவசாய கிணற்றில் வீழ்ந்த காட்டு யானை ஒன்று வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் மீட்கப்பட்டுள்ளது.
ஒதியமலை பகுதியில் 20 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் காட்டுயானை விழுந்து கிடப்பதைக் கண்ட விவசாயி கிராம சேவையாளருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குக் காலை 10.00 மணிக்குச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கனரக இயந்திரங்கள் கொண்டு யானையினை கிணற்றிலிருந்து மீட்டுள்ளார்கள்.
அலியன் எனப்படும் தனியானையே இவ்வாறு கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளது.
ஒதியமலை கிராமத்தில் யானைவேலி இல்லாத நிலையில் நாளாந்தம் காட்டுயானையால்
விவசாய விளை நிலங்கள் அழிக்கப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.


பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam