உக்ரைனுக்கு எதிரான நடவடிக்கையில் ரஷ்யாவிற்கு கிடைத்த வெற்றி
போரில் உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஸபோரிஸியா ஆகிய 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைக்க முன்னெடுத்த வாக்கெடுப்பில், ரஷ்யா வெற்றிபெற்றுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, உக்ரைனின் லுஹான்ஸ்க், கெர்சன் பகுதிகளை இணைத்துக்கொள்ளுமாறு ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அந்த பிராந்தியங்களின் தலைவர்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அந்த பகுதிகளில் நடத்தப்பட்ட மேற்கத்திய நாடுகளால் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட பொது வாக்கெடுப்பில் ரஷ்யாவுடன் இணைய பெரும்பாலான பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த அழைப்பை பிராந்தியத் தலைவர்கள் விடுத்துள்ளனர்.
பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட மற்ற இரு ரஷ்ய ஆக்கிரமிப்பு உக்ரைன் பிரதேசங்களின் தலைவர்களும் இதே போன்ற கோரிக்கையை விரைவில் விடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை Cineulagam
மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri