இங்கிலாந்தில் மக்கள் மீது மோதிய சிற்றூர்ந்து: பயங்கரவாத செயலா என்பது குறித்து விசாரணை
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடத்தப்பட்ட வெற்றி அணிவகுப்பின் போது மக்கள் மீது சிற்றூர்ந்து மோதியதில் 27 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 53 வயதான இங்கிலாந்து நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் பிரீமியர் லீக் கால்பந்து போட்டி நடைபெற்ற நிலையில், அதில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது.
தீவிர விசாரணை
இதனையடுத்து அந்த அணியினர் நேற்று லிவர்பூல் நகரில் வெற்றி அணிவகுப்பை நடந்தினர்.
இதன்போதே, அணிவகுப்பின் மீது சிற்றூர்ந்து ஒன்று மோதியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் குறித்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டதா என்பது குறித்து அந்த நாட்டின் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 1 நாள் முன்

சொத்துக்களை இழந்தேன்! நடிகை ராதிகாவின் சீரியல் என்னை கிழவன் ஆக்கிவிட்டது.. நடிகர் பப்லூ பேச்சு Cineulagam

இந்தியா அளித்த அதிர்ச்சி வைத்தியம்... சீனா, துருக்கியிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் பாகிஸ்தான் News Lankasri
