அதிக வேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி
வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியொன்று பலத்த சேதமடைந்ததுடன், அதில் பயணித்த இளைஞர்கள் எதுவித காயங்களுமின்றி அதிஸ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர்.
வவுனியா நகரப்பகுதியிலிருந்து பெரியார் குளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த
முச்சக்கரவண்டி பூந்தோட்டம் ஆறுமுகநாவலர் சிலை அருகில் சென்று கொண்டிருந்த போது
வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கரையிலிருந்த பள்ளத்தினுள் பாய்ந்து
விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர்களிற்கு எதுவித காயங்களும் ஏற்படாத நிலையில், முச்சக்கரவண்டி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
அதிக வேகமே விபத்திற்குக் காரணம் என விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.