இலங்கையின் ஜனாதிபதி பதவிக்கு ஆசைப்படும் தமிழ் அரசியல்வாதி
அரசியலமைப்பில் வாய்ப்புக்கள் இருந்தால் இந்த நாட்டின் ஜனாதிபதியாக ஆவதற்கும் எனக்குத் தகுதிகள் உண்டு. இதனை நான் பகிரங்கமாக அறிவிக்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதியாகும் தகுதி எனக்கு உண்டு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின்போது சந்தர்ப்பம் வழங்கப்படுமானால், நான் பிரதியமைச்சராகவோ அல்லது ராஜாங்க அமைச்சராகவோ பதவி ஏற்க மாட்டேன். அமைச்சராவதுதான் எனது முடிவு.
அதைவிட, இலங்கையின் அரசியல் யாப்பு மாறியிருந்தது என்று சொன்னால், நான் நாட்டின் ஜனாதிபதி பொறுப்பை வகிக்கவும் தகுதியானவன்தான்.
இந்த நாட்டின் ஜனாதிபதியாக செயற்படுவதற்கும் எனக்குத் தகுதி உண்டு. அதனை வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும் தெரிவித்து கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
