உண்டியல் முறையின் கீழ் பெருந்தொகை பணத்தை பரிமாற்றிய நபர் கைது
வெலிகம பிரதேசத்தில் உண்டியல் முறையின் கீழ் வெளிநாட்டுப் பணத்தைப் பரிமாற்றிக் கொண்டிருந்த நபரொருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
வெலிகம, கல்பொக்க பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் சிக்கியுள்ளார்.
சட்டவிரோதமான உண்டியல் முறையின் கீழ் வெளிநாட்டுப் பணத்தை மாற்றியமைக்காக கல்பொக்க பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பணத்தின் மொத்தப் பெறுமதி ஒரு கோடியே 67 லட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க டொலர், யூரோ, பிரித்தானிய பவுண்ட், திர்ஹாம் உள்ளிட்ட பல வெளிநாட்டு நாணயங்கள் அந்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan