சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதல்: 23 பேர் பலி
சிரியாவில் ராணுவ வீரா்கள் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 போ் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கையில்,
கடந்த (10.08.2023) ஆம் திகதி டெயிா் அல்-ஸூா் மாகாணத்தில் ராணுவ வீரா்களை ஏற்றிக் கொண்டு பாலைவனச் சாலை வழியாக சென்று கொண்டிருந்த பேருந்து மீது திடீரென இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா்.

பயங்கரவாத தாக்குதல்கள்
இதில் 23 வீரா்கள் உயிரிழந்தனா்; 20 போ் காயமடைந்தனா் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவிலும், ஈராக்கிலும் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2019 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டனா்.
எனினும், அவா்கள் பொதுமக்களிடையே மறைந்திருந்து அவ்வப்போது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri