புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை!
புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் பாவனைக்கு உதவாத 30 கிலோகிராம் மாட்டு இறைச்சி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு பகுதியிலுள்ள சந்தையில் திடீரென இன்றையதினம் (09.04.2025) சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடுமையான எச்சரிக்கை
இதன்போது பாவனைக்குதவாத வகையில் இருந்த மாட்டு இறைச்சி பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டு, கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் உரிமையாளரின் அனுமதியுடன் எரித்து அழிக்கப்பட்டிருந்தது.
குறித்த சோதனை நடவடிக்கையில் விசுவமடு சுகாதார பரிசோதகர் சந்திரமோகன், வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொஜிஷ்ரன் , கோம்பாவில் பொது சுகாதார பரிசோதகர் சுரேஸ் ஆனந்தன், புதுக்குடியிருப்பு பொது சுகாதார பரிசோதகர் கோகுலன் ஆகியோரும் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.









சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

சக்திவாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்: வெளியான முக்கிய அறிவிப்பு News Lankasri
