யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவனொருவர் படுகாயம்
யாழ். (Jaffna) நெல்லியடி பகுதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த மாணவன், தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்றுவிட்டு கற்றல் நிறைவடைந்த பின்னர் தனது துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தவேளை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
மாலிசந்தி பகுதியிலிருந்து புளியடி சந்தி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், மாணவனின் துவிச்சக்கர வண்டியும் மோதி ஏற்பட்ட இந்த விபத்தில் மாணவன் படுகாணமடைந்துள்ளார்.

இந்நிலையில், காயமடைந்த மாணவனை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சக மாணவர்கள் கொண்டுசென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து, அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam