ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு நீதி கிடைக்க வேண்டும்: வவுனியா ஊடக அமையம் வலியுறுத்து

Sri Lanka Police Vavuniya Sri Lankan protests Journalists In Sri Lanka Sri Lanka Anti-Govt Protest
By Thileepan Jul 10, 2022 08:10 AM GMT
Report

இலங்கையில் நான்கு ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு நீதியான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என வவுனியா ஊடக அமையம் வலியுறுத்தியுள்ளது.

சக்தி மற்றும் சிரச ஊடக வலையமைப்பின் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா ஊடக அமையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் தன்னெழுச்சியாக கோட்டா அரசாங்கத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.

ஊடக அறிக்கை

அதன் ஒரு கட்டமாக நேற்றைய தினம் (09) ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமரின் வீடு என்பன மக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு நீதி கிடைக்க வேண்டும்: வவுனியா ஊடக அமையம் வலியுறுத்து | A Statement Gainst Attacks Journalists In Colombo

இந்த சம்பவத்தின் போது ஜனநாயகத்தின் நான்காவது தூணாக களத்தில் நின்று மக்களுக்கு உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் மீது மிலேச்சத்தனமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது.

சக்தி, சிரச ஊடக வலையமைப்பின் ஊடகவியலாளர் நால்வரும் தாம் ஊடகவியலாளர் என வெளிப்படுத்திய பின்னரும், பொலிஸாரும், விசேட அதிரடி படையினரும் இணைந்து காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

யுத்த காலத்திலும், யுத்தத்திற்கு பின்னரும் இந்த நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கு இடமளிக்காது ஆட்சியாளர்கள், ஆயுத முனையில் அதனை அடக்கி ஆழ முற்பட்டு வருகின்றனர்.

யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஊடகம் அடக்கு முறை என்பது தொடர்கின்றது என்பதை இந்த சம்பவம் படம் போட்டு காட்டுகின்றது.

தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் விரைவில் நலன்பெற இறைவனை வேண்டுகின்றோம்.

ஊடகவியலாளர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உடனடியாக நீதியான விசாரணைகள் இடம்பெற வேண்டும்.

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு நீதி கிடைக்க வேண்டும்: வவுனியா ஊடக அமையம் வலியுறுத்து | A Statement Gainst Attacks Journalists In Colombo

மேலும், சம்மந்தப்பட்ட பாதுகாப்பு தரப்பினர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட நான்கு ஊடகவியலாளர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என வவுனியா ஊடக அமையம் வலியுறுத்துகிறது.

கோரிக்கை

இலங்கையில் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டமை, ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பிலும் நீதியான ஒரு விசாரணை இடம்பெற வேண்டும்.

சர்வதேச சமூகமும், ஓட்டு மொத்த ஊடக அமைப்புக்களும் அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு நீதி கிடைக்க வேண்டும்: வவுனியா ஊடக அமையம் வலியுறுத்து | A Statement Gainst Attacks Journalists In Colombo

குற்றவாளிகள் தண்டிக்கப்படும் இடத்தில் மட்டுமே இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமையை உறுப்படுத்த முடியும்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய ஊடக சுதந்திரமும் பாதுக்காக்கப்படும் என ஊடக அமையம் நம்புகின்றது” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க ஊடக நிறுவனங்களை தாக்கும் முயற்சியில் போராட்டக்காரர்கள்


1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US