ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு நீதி கிடைக்க வேண்டும்: வவுனியா ஊடக அமையம் வலியுறுத்து

Sri Lanka Police Vavuniya Sri Lankan protests Journalists In Sri Lanka Sri Lanka Anti-Govt Protest
By Thileepan Jul 10, 2022 08:10 AM GMT
Report

இலங்கையில் நான்கு ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு நீதியான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என வவுனியா ஊடக அமையம் வலியுறுத்தியுள்ளது.

சக்தி மற்றும் சிரச ஊடக வலையமைப்பின் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா ஊடக அமையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் தன்னெழுச்சியாக கோட்டா அரசாங்கத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.

ஊடக அறிக்கை

அதன் ஒரு கட்டமாக நேற்றைய தினம் (09) ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமரின் வீடு என்பன மக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு நீதி கிடைக்க வேண்டும்: வவுனியா ஊடக அமையம் வலியுறுத்து | A Statement Gainst Attacks Journalists In Colombo

இந்த சம்பவத்தின் போது ஜனநாயகத்தின் நான்காவது தூணாக களத்தில் நின்று மக்களுக்கு உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் மீது மிலேச்சத்தனமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது.

சக்தி, சிரச ஊடக வலையமைப்பின் ஊடகவியலாளர் நால்வரும் தாம் ஊடகவியலாளர் என வெளிப்படுத்திய பின்னரும், பொலிஸாரும், விசேட அதிரடி படையினரும் இணைந்து காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

யுத்த காலத்திலும், யுத்தத்திற்கு பின்னரும் இந்த நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கு இடமளிக்காது ஆட்சியாளர்கள், ஆயுத முனையில் அதனை அடக்கி ஆழ முற்பட்டு வருகின்றனர்.

யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஊடகம் அடக்கு முறை என்பது தொடர்கின்றது என்பதை இந்த சம்பவம் படம் போட்டு காட்டுகின்றது.

தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் விரைவில் நலன்பெற இறைவனை வேண்டுகின்றோம்.

ஊடகவியலாளர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உடனடியாக நீதியான விசாரணைகள் இடம்பெற வேண்டும்.

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு நீதி கிடைக்க வேண்டும்: வவுனியா ஊடக அமையம் வலியுறுத்து | A Statement Gainst Attacks Journalists In Colombo

மேலும், சம்மந்தப்பட்ட பாதுகாப்பு தரப்பினர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட நான்கு ஊடகவியலாளர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என வவுனியா ஊடக அமையம் வலியுறுத்துகிறது.

கோரிக்கை

இலங்கையில் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டமை, ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பிலும் நீதியான ஒரு விசாரணை இடம்பெற வேண்டும்.

சர்வதேச சமூகமும், ஓட்டு மொத்த ஊடக அமைப்புக்களும் அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு நீதி கிடைக்க வேண்டும்: வவுனியா ஊடக அமையம் வலியுறுத்து | A Statement Gainst Attacks Journalists In Colombo

குற்றவாளிகள் தண்டிக்கப்படும் இடத்தில் மட்டுமே இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமையை உறுப்படுத்த முடியும்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய ஊடக சுதந்திரமும் பாதுக்காக்கப்படும் என ஊடக அமையம் நம்புகின்றது” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க ஊடக நிறுவனங்களை தாக்கும் முயற்சியில் போராட்டக்காரர்கள்


5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US