ஐ.நா அமர்வில் இலங்கை மீதான வாக்கெடுப்பு விரைவில் நடத்தப்படலாம் - தினேஷ் குணவர்தன
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு எதிர்பார்த்த திகதிக்கு முன்னதாகவே நடத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமர்வுகள் அடுத்தடுத்து நடைபெறுவதால் இது இன்னும் திட்டமிடப்படவில்லை. இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வரைபு தொடர்பில் இன்னும் இணக்கம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அமர்வின் போது இதுவரை 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக பேசியுள்ளன. இது ஒரு சாதனையாகும். எனினும் இங்கிலாந்து தலைமையிலான முக்கியக் குழுமத்தின் தீர்மானம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதையே இலங்கை அரசாங்கம் விரும்புகிறது என்று தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
உறுப்பு நாடுகளுக்கு தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க இலங்கை அரசாங்கம் அயராது உழைத்தது, எனினும் மேற்கத்திய நாடுகள் ஐக்கிய நாடுகளின் அமர்வில் இலங்கை குறித்து எதிர்மறையான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
மனித உரிமைகள் பேரவையின் சில நடவடிக்கைகள் நியாயமானவை அல்ல, ஏனெனில் பேரவை பரிந்துரைத்ததை விசாரிக்க அரசாங்கம் ஏற்கனவே ஒரு ஜனாதிபதி ஆணையத்தை நியமித்துள்ளது என்று அவர் தினேஸ் குறிப்பிட்டுள்ளார்.





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
