சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி திடீர் மரணம்: பரிசோதனையில் வெளியான தகவல்

Sri Lanka Police Batticaloa Prisons in Sri Lanka Prison
By Kumar Nov 30, 2023 05:54 AM GMT
Report

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சிறைக் கைதி ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலை - முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான (48) சோமசுந்தரம் துரைராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தார் என  குற்றம் சுமத்தப்பட்டு கடந்தவாரம் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் இவர் கைது  செய்யப்பட்டு நீதிமன்றில்  முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 

அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

உடற்கூற்றுப் பரிசோதனையில் வெளியான தகவல் 

இந்தநிலையில், குறித்த நபருக்கு கடந்த 28ஆம் திகதி அன்று ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

இதன்போதே சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி திடீர் மரணம்: பரிசோதனையில் வெளியான தகவல் | A Prisoner Died Suddenly In Batticaloa Prison

இதனையடுத்து, மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் அவர்களின் உத்தரவிற்கு அமைவாக சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பாவையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்துள்ளார்.

இந்நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையின் போது சடலத்தின் உடலின் உட்பகுதியில் காயங்கள் காணப்பட்டதனையடுத்து சம்பவம் பற்றி திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸாரின் ஊடாக நீதிமன்ற நீதிவான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வருகைத்  தந்த நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் சடலத்தை பார்வையிட்ட பின்னர் மேலதிக  உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

அரச ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம்

அரச ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம்

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி தகவல்! வசூலிக்கப்படவுள்ள 30 ஆயிரம் ரூபா

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி தகவல்! வசூலிக்கப்படவுள்ள 30 ஆயிரம் ரூபா

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US