முல்லைத்தீவில் கைத்துப்பாக்கியை திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது
முல்லைத்தீவு(Mullaitivu) - வெலிஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் உள்ள கைத்துப்பாக்கியை திருடிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (01.06.2024) இடம்பெற்றுள்ளது.
வெலிஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மைதிரிபுர பதவியா பகுதியினை சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
திருடப்பட்ட கைத்துப்பாக்கியானது பொலிஸ் நிலையத்திற்குள் மறைத்துவைத்திருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை இன்றைய தினம்(02) கெப்பற்றிகொலாவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் வெலிஓயா பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரான சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தனது நண்பர் பன்றியை வேட்டையாடுவதற்காக துப்பாக்கியினை தான் எடுத்து மறைத்து வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

ராஜநாகங்களின் ராஜ்யம்: இந்தியாவில் மனிதர்களை விட நாகங்கள் அதிகம் வாழும் நகரம் எது தெரியுமா? Manithan

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
