நாட்டின் அனைத்து நகரங்களிலும் உடனடியாக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை!
அரச மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் அரச மருந்தகங்களை விரைவாக நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
திட்டம்
இது குறித்து மேலும் கூறுகையில்,''‘உங்கள் நகரத்திற்கான மருந்தகம்” திட்டத்தின் கீழ், இவ்வாறு அரச மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் அரச மருந்தகங்களை விரைவாக நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், “உங்கள் நகரத்தில் ஒரு மருந்தகம்” திட்டம் அவசரத் திட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
அரச மருந்தகங்கள்
இந்த துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் மருந்தகங்கள் இல்லாத மாவட்டங்கள் உட்பட பிற மாகாணங்களில் அரச மருந்தகங்களை நிறுவுவதற்கான அவசரத் திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து தசாப்தங்களாக, நாடு முழுவதும் 64 அரச மருந்தகங்களை நிறுவுவதற்கு அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் இந்த அரச மருந்தகங்கள் அனைத்தும் நாட்டு மக்களுக்கு பயனுள்ள, தரமான மற்றும் தொடர்ச்சியான சேவையை வழங்கும்.'' என அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri
தீவு நாடொன்றை மொத்தமாக தாக்கவிருக்கும் புயல்: ஹொட்டல் ஒன்றில் சிக்கிய 200 பிரித்தானியர்கள் News Lankasri