இலங்கைக்கு தங்கம் கடத்த முற்பட்ட ஒருவர் கைது
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்த முற்பட்ட நபர் ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
டுபாயிலிருந்து - கொழும்பு வழியாக திருச்சி வந்தடைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போதே இவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த நபர் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்டதை கவனித்த அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்துள்ளனர்.
பறிமுதல் நடவடிக்கை

இந்நிலையில் அவர் அணிந்து வந்த காலணியை கழட்டி சோதனை மேற்கொண்டதில் காலணியின் நடுவில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூபாய் 28 இலட்சத்து 30 ஆயிரத்து 954 மதிப்புள்ள 467 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குறித்த சந்தேகநபரிடம் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் மாத சிறப்பு பலன்கள்: நான்காம் இடத்தில் உச்சம் பெறும் குரு! மேஷத்துக்கு ஜாக்பாட் உறுதி Manithan
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan