இலங்கைக்கு தங்கம் கடத்த முற்பட்ட ஒருவர் கைது
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்த முற்பட்ட நபர் ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
டுபாயிலிருந்து - கொழும்பு வழியாக திருச்சி வந்தடைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போதே இவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த நபர் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்டதை கவனித்த அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்துள்ளனர்.
பறிமுதல் நடவடிக்கை
இந்நிலையில் அவர் அணிந்து வந்த காலணியை கழட்டி சோதனை மேற்கொண்டதில் காலணியின் நடுவில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூபாய் 28 இலட்சத்து 30 ஆயிரத்து 954 மதிப்புள்ள 467 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குறித்த சந்தேகநபரிடம் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
