எரிபொருள் பதுக்கி வைத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது(Photo)
எரிபொருள் பதுக்கி வைத்த குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மன்னாகண்டல் பகுதியில் நேற்று (13)மாலை இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் 1590 லீட்டர் டீசலினை தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாற்றப்பட்ட சந்தேக நபர் கனரக இயந்திரங்கள், உளவு இயந்திரங்கள், டிப்பர் வாகனங்கள் என்பவற்றை வைத்து பாரியளவிலான விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கைது நடவடிக்கை
இதேவேளை வழக்கை பதிவு செய்த புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதாகிய சந்தேக நபரையும் , சான்று பொருட்களையும் மாவட்ட நீதவான் நீதிமன்றில் கையளிப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொலிஸாரின் விசேட அறிவிப்பு
“மக்களே வீடுகளில் எரிபொருளை சேமித்து வைக்காதீர்கள் , நாட்டில் நிலவும்
எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை தொடச்சியாக இருக்கும் நிலையில்
வீடுகளில் எரிபொருளை தேவைக்கு மேலதிகமாக சேமித்து வைக்காதீர்கள். இதனை மீறுவோருக்கு எதிராக
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.