இராணுவத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய வேலைத்திட்டம்
நாடு முழுவதும் உள்ள நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் இலங்கை இராணுவத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைய, இந்த களஞ்சியசாலைகள் சுத்தம் செய்யப்படுகின்றன.
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்
இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த களஞ்சியசாலைகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும், இதனால் நெல் கொள்வனவு நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, நெல் சந்தைப்படுத்தல் சபையின் கீழ் உள்ள 209 நெல் களஞ்சியசாலைகள் சுத்தப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
