கடவுச்சீட்டு அலுவலகத்தில் தொடரும் நீண்ட வரிசை
கடவுச்சீட்டு தொடர்பில் அவசர தேவைகள் உள்ளவர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், கடவுச்சீட்டு அலுவலகத்தில் நீண்ட வரிசைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி கோரிக்கையை அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நேற்றும் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய கடவுச்சீட்டுக்கள் தொகுதிகளாக பெறப்பட்டு வருவதாகவும் நவம்பர் நடுப்பகுதி வரையில் 100,000 கடவுச்சீட்டுகள் கையிருப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் விஜித ஹேரத்தெரிவித்திருந்தார்.
கடவுச்சீட்டு அலுவலகம்
அத்துடன், அவசர தேவை உள்ளவர்கள் மட்டும் கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு வருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இருப்பினும், நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்தும் வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அதிகாரிகள் முறையான செயல்முறையை நடைமுறைப்படுத்தாமையால், குழப்பநிலையும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 14 நிமிடங்கள் முன்

இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் - வெளிவந்த உண்மை News Lankasri

72 வது உலக அழகியாக முடிசூடிய தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ! பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? News Lankasri

மனைவிக்கு வாழ்த்து சொன்ன நாக சைதன்யா! சமந்தா பற்றி குறிப்பிட்டு வறுத்தெடுத்த நெட்டிசன்கள் Cineulagam
