கரைவலையில் சிக்கிய பெருந்தொகை மீன்கள்
பாணந்துறை வாத்துவ தல்பிட்டிய பிரதேசத்தில் சுமார் 15 ஆயிரம் கிலோ கிராம் பாறை மீன்கள் தமது கரை வலையில் சிக்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கோடி ரூபா பெறுமதியான மீன்கள்
வாத்துவ தல்பிட்டிய பிரதேசத்திற்கு அருகில் கடலில் விரிக்கப்பட்டிருந்த வலையில் இன்று காலை இந்த மீன்கள் சிக்கியுள்ளன.மஞ்சள் பாறை, எண்ணெய் பாறை மற்றும் கிரவல் மீன் என்பன வலையில் சிக்கியிருந்ததாக கரை வலையின் உரிமையாளர் சுசில் பெரேரா கூறியுள்ளார்.
மீன்களை கொள்வனவு செய்ய அதிகளவானோர் வாத்துவ தல்பிட்டிய கடற்கரைக்கு சென்றிருந்தனர். வலையில் சிக்கி மீன்களில் சில்லறை விலை சுமார் ஒரு கோடி ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.