தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதுபெரும் தூண் சரிந்தது
தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதுபெரும் தூணான மாமனிதர் மருத்துவர் ஜெயகுலராஜாவின் (Dr.T.W.Jeyakularajah) மறைவுக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் சார்பில் ஆத்மார்த்தமான அஞ்சலி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
ஜெயகுலராஜா, தனது வாழ்நாளில் அதிகமான காலப்பகுதியை தேசவிடுதலைப் பணிக்காக அர்ப்பணித்தவர். ஈழத்தமிழரின் உரிமைப்போராட்டத்தின் ஆரம்பம் முதலே தன்னை தமிழினத்தின் ஒப்பற்ற உயரிய உன்னத விடுதலைப்பணிக்காக தன்னை அவர் அர்ப்பணித்துள்ளார்.
தனிமனித சரித்திரம்
தனது தியாகம் நிறைந்த பணியினாலும் போர்க்காலங்களில் மக்கள் துயர்துடைப்பு பணிகளிலும் மருத்துவ சேவையிலும் தன்னை அர்ப்பணித்து பணியாற்றியதன் மூலம் எம்மின மக்களின் உள்ளங்களிலும் எம் தேசத்தலைவரின் இதயத்திலும் நீங்காத இடம்பிடித்தன் மூலம் எம் தேச ஆன்மாவில் நீக்கமற நிலைத்து ஈழத்தமிழர் வரலாற்றில் தனிமனித சரித்திரமாக மிளிர்கின்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
