அதிகரித்து வரும் தொழுநோய்...! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கம்பஹா மாவட்டத்தில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் இந்திக வன்னிநாயக்க ஆகியோரினால் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், கம்பஹா மாவட்டத்தில் இவ்வருடத்தில் இதுவரை சுமார் 130 தொழுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் நிலங்கி சுபசேகர தெரிவித்துள்ளார்.
தொழுநோய் அறிகுறிகள்
தொழுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையான மருத்துவ சிகிச்சையைப் பெறுவதன் மூலம் இதனை குணப்படுத்த முடியும்.
தோல் உணர்வின்மை மற்றும் புண்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தோல் மருத்துவமனை அல்லது தோல் மருத்துவரிடம் பரிந்துரைத்து தேவையான சிகிச்சையைப் பெற வேண்டும் என்றும் தொற்றுநோயியல் நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தொழுநோய்க்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது எலும்பியல் நிலைக்கு கூட வழிவகுக்கும்.
எனவே, ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம் என்றும் முறையான சிகிச்சையால் தொழுநோயைக் குணப்படுத்த முடியும் என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

தீவிரம் அடையும் இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம்! அங்கிருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் கிடைத்துள்ள சமீபத்திய தகவல்



