அம்பாறையில் இறக்காமம் ஹோட்டல் மீது 8 பேர் கொண்ட குழு தாக்குதல்
அம்பாறை - இறக்காமம், வரிப்பதான்சேனையில் அமைந்துள்ள சலாமத் ஹோட்டல் மீது 8 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (03.04.2023) பதிவாகியுள்ளது.
நேற்றிரவு ஹிங்குரானை பகுதியைச் சேர்ந்த குழுவினராலேயே ஹோட்டலில் உள்ள விலை மதிப்புள்ள பொருட்கள் தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலையில் அனுமதி
பின்னர் இதைத் தடுத்து நிறுத்த முயன்ற ஹோட்டல் உரிமையாளரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரையும் குறித்த குழுவினர் தாக்கியுள்ளனர்.
ஹோட்டலின் உரிமையாளரும் தாக்குதல் நடத்திய குழுவைச் சேர்ந்த இரண்டு நபர்களும் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முரண்பாட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
எனவே இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
