தாயுடனான பணக்கொடுக்கல் வாங்கல் தகராறுக்கு மகனைக் கடத்திய வர்த்தர்
கண்டியில் பெண்ணொருவருடனான கடன் கொடுக்கல் வாங்கல் தகராறில், பெண்ணின் மகனைக் கடத்திய நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஹந்தான பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் 16 வயதுடைய மகன் கடந்த 15ஆம் திகதி கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடன் கொடுக்கல் வாங்கல் தகராறு
இதற்கமைய தனது மகனை கடந்த 15ஆம் திகதி பிற்பகல் கடத்தப்பட்டதாக அந்த பெண் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
12 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக தொழிலதிபரிடம் வழங்கிய காசோலைகள் காரணமாக கடத்தல் இடம்பெற்றதாக அந்தப் பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே சிறுவனைக் கடத்திச் சென்று பின்னர் மாவனெல்லையில் சிறுவன் விடுவித்து, பேருந்தில் வீட்டிற்கு செல்வதற்கு பணத்தையும் வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 21 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam