வாவியில் மீன்பிடிக்கச் சென்ற நபருக்கு நேர்ந்த கொடுமை
மட்டக்களப்பு - கல்லடி தனியார் விடுதிக்கு அருகிலுள்ள வாவியில் மீன்பிடிக்கச் சென்றவர்களில் ஒருவர் தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்றைய தினம் (16.05.2023) இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்முனை - பாண்டிருப்பு எல்லை வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய உதயராஜன் தனேஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் வெளிநாட்டில் இருந்து வந்து, கல்லடிப் பிரதேசத்தில் திருமணம் முடித்து மூன்று மாதங்களான நிலையில், அடுத்த வாரம் மீண்டும் வெளிநாட்டுக்குச் செல்லத் தயாராக இருந்துள்ளார். இந்த நிலையிலேயே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம்
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |