கிளிநொச்சியில் விவசாயியொருவர் சந்தையில் விழுந்து மரணம்
கிளிநொச்சியில் விவசாயி ஒருவர் சந்தையில் விழுந்து மரணமடைந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
விவசாயி ஒருவர் தனது தோட்டத்து மரக்கரிகளை விற்பனைக்கு கொண்டு சென்ற போது இன்று சந்தைப்பகுதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு படுதியில் வசித்துவரும் பலனியான்டி மகேந்திரம் என்ற 66 வயதுடைய நபரே இவ்வாறு தருமபுரம் சந்தைப்பகுதியில் உயிரிழந்துள்ளார்.
இதன்போது உயிரிழந்தவரினது சடலம் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.