இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரருக்கு கோவிட் தொற்று
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் சார்பில் விளையாடி வரும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் அன்ஜலோ மெத்தியூஸ் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
நேற்றைய தினம் அவருக்கு காணப்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள மெத்தியூஸ்
கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள மெத்தியூஸ் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் முதல் இன்னிங்ஸிற்காக மெத்தியூஸ் 39 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட் காரணமாக மெத்தியூஸ் இந்த டெஸ்ட் போட்டியில் இனி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்ஜலோ மெத்தியூஸிற்கு பதிலாக ஓசத பெர்னாண்டோ இலங்கை அணியின் சார்பில் விளையாட உள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
