குடும்பஸ்தர் ஒருவர் மண்வெட்டி பிடியால் தாக்கி கொலை (Photos)
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மண்வெட்டி பிடியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீரசாமி பெஞ்சமின் (40 வயது)என்ற 3 பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கொலை
செய்யப்பட்டுள்ளதாக என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதலில் கொல்லப்பட்ட நபர் தனது தாயுடன் நேற்று(29.08.2023) முரண்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
இதனால் ஏற்பட்ட சத்தம் கேட்டு, அது தொடர்பில் விசாரிக்க சென்ற அயல் வீட்டு காரருடன், வாய் தர்க்கம் ஏற்பட்ட நிலையில் குறித்த நபர் மண்வெட்டிப் பிடியால் அவரைத் தாக்கியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த நபர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று (30.09.2023) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
தாக்குதலை நடத்திய நபர் தலைமறைவான நிலையில், லிந்துலை நாகசேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
