கிளை விட்டு காய்க்கும் தென்னை மரம் : முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் அதிசயம் (Photos)

Mullaitivu Economy of Sri Lanka Northern Province of Sri Lanka
By Uky(ஊகி) Jan 02, 2024 07:01 AM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report

ஒட்டுசுட்டான் மாமடுவில் கிளைவிட்டு காய்க்கும் தென்னை ஒன்று பார்ப்போரை அதிசயிக்க வைக்கின்றது.

பொதுவாக தென்னை மரங்கள் கிளைவிட்டு காய்ப்பதில்லை என்பதால் மக்களிடையே இது ஆச்சரியமான விடயமாக இருப்பதாக மக்களில் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இரு கிளைகளிலும் அதிகளவான காய்கள் இருப்பதை அவதானிக்க முடிந்தது. தனிமரம் காய்ப்பது போல் ஒரு மரத்தில் உள்ள இரு கிளைகளிலும் காய்கள் அதிகமாக இருக்கின்றது.

வரலாறு காணாத சாதனை படைத்த இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம்

வரலாறு காணாத சாதனை படைத்த இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம்

மரத்தின் அமைவிடம்

ஒரு அடியில் இரு மரங்கள் என்று நகைச்சுவைமிகு கருத்தாடலை அவ்வூரில் வாழ்ந்து வரும் உயர்தர உயிரியல் பிரிவு மாணவன் ஒருவர் பகிர்ந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாமடு கிராமத்தில் வெள்ளைப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இருக்கின்றது இந்த கிளைவிட்டு காய்க்கும் தென்னைமரம்.

கிளை விட்டு காய்க்கும் தென்னை மரம் : முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் அதிசயம் (Photos) | A Coconut Tree That Leaves A Branch

மாமடு என்றும் பழைய மாமடு என்றும் இரு பகுதிகள் உள்ளன. இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.

பழைய மாமடுவில் ஒரு பகுதி வவுனியா மாவட்ட நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புளியங்கும் முல்லைத்தீவு வீதியுடன் பழம்பாசி வீதி இணையும் சந்தியில் உள்ள பிள்ளையார் ஆலயமே வெள்ளைப் பிள்ளையார் ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலயத்தில் இருந்து மேற்குப்பக்கமாக ஐம்பது மீற்றர் தொலைவில் தனிநபரொருவரின் காணியில் வளர்ந்துள்ளது. இது இருபத்தைந்தாண்டுகள் வயதுடைய தென்னையாக இருக்கும் என்று அவ்வூர் பெரியவர் ஒருவர் குறிப்பிட்டார்.

அரிதான செயல்

பேரின தென்னை வகையைச் சேர்ந்த இது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வாழக் கூடியது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நன்றாக காய்க்கும் இரு கிளைகளும் ஆரோக்கியமான கிளைகளாகவே ஆரம்பம் முதல் இருந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிளை விட்டு காய்க்கும் தென்னை மரம் : முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் அதிசயம் (Photos) | A Coconut Tree That Leaves A Branch

சுற்றியுள்ள கிராமத்தில் வாழ்ந்து வரும் பலருக்கு இந்த தென்னை பற்றிய தகவல் தெரியவில்லை என்பது அந்த மரத்தினை தேடிச் சென்ற அனுபவத்தின் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது.

தேடியறியும் ஆர்வமும் ஆச்சரியங்களை ஆய்வு செய்யும் ஆற்றலும் எல்லோருக்கும் இருப்பதில்லை. அதனால் சிலர் தெரிந்து கொண்ட போதும் அது பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

இளவயதினருக்கு கூட இந்த தென்னையை அறிந்துகொள்ளும் ஆர்வம் இல்லையென்பது கவலைக்குரிய விடயமாகும் என அந்த பெரியவர் என்னுடைய கேட்டல்களின் போது பதிலளித்தார்.

தென்னை போன்ற மரங்கள் கிளைகொள்வது மிகவும் அரிதான செயல்களாக இருக்கின்றது. இருபது அடி உயரத்தில் இரு கிளைகளும் தோன்றியுள்ளது.

மின்சார ஊழியர்கள் அரசிற்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

மின்சார ஊழியர்கள் அரசிற்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

தென்னையின் இயல்புகள்

ஒவ்வொரு கிளையும் ஆறடி நீளமுள்ள தண்டினை (மரக்குற்றியை என குறிப்பிட்டு பேசினார்) கொண்டுள்ளமையையும் சுட்டிக்காட்டியதோடு இரு கிளைகளும் நன்றாக காய்க்கின்றது மிக அரிது என்பதால் இது பார்த்து அறிந்து கொள்ள வேண்டிய ஒரு தென்னை மரமாக இருப்பது சிறப்பானது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Cocos nucifera என்ற விஞ்ஞானப் பெயரைக் கொண்ட தென்னை தாவரவியல் பாகுபாட்டில் ஒருவித்திலையி தாவரமாக அமைகின்றது. கரோலஸ்லினியஸ் (லின்னா) என்ற தாவரவியலாளரால் அடையாளப்படுத்தப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது.

கிளை விட்டு காய்க்கும் தென்னை மரம் : முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் அதிசயம் (Photos) | A Coconut Tree That Leaves A Branch

வித்தினுள் ஒரு சேமிப்பிலையை (வித்தகவிழையம்) மட்டும் கொண்ட தாவரங்கள் ஒருவித்திலையிகள் எனப்படும். இவை கிளையற்றவை. ஆணிவேர்த் தொகுதியை கொண்டிருக்காது.

வளரும் போது உயரத்தில் அதிகரித்த போதும் சுற்றுப் பருமனை அதிகரிக்காது. மாறிழையம் இல்லாதவை.

பூக்கள் முப்பாத்து அல்லிகளை கொண்டவை. தெளிவான புல்லி, அல்லி வட்டங்களை கொண்டிருக்காது. தென்னையில் மகரந்த சேர்க்கையை நிகழ்த்தும் விலங்குகளில் அணில், வௌவால் முதன்மையானவை என உயர்தர உயிரியல் பாட ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.

பொலன்னறுவை நீர்த்தேக்கங்களின் அதிகரித்த நீர்மட்டம் : பொதுமக்கள் பாதிப்பு

பொலன்னறுவை நீர்த்தேக்கங்களின் அதிகரித்த நீர்மட்டம் : பொதுமக்கள் பாதிப்பு

பகிரப்பட்ட நினைவுகள்

நெல், மூங்கில், கோதுமை, பனை, கமுகு, இறுங்கு, சோளம், தென்னை, கரும்பு போன்ற தாவரங்கள் ஒருவித்திலையிகள் தாவர வகுப்பினுள் அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிளைவிட்டு காய்க்கும் தென்னை பற்றிய தேடலின் போது தன் நினைவுகளையும் ஒருவர் பகிர்ந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் தங்கள் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் நிர்வாகம் இருந்தது. அப்போது பொது மக்களின் நுகர்வுக்காக தேங்காயின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

கிளை விட்டு காய்க்கும் தென்னை மரம் : முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் அதிசயம் (Photos) | A Coconut Tree That Leaves A Branch

அரிசியும் தேங்காயும் மீனும் கட்டுப்பாட்டுக்குள் விலை இருந்தது. அதனால் ஒரு நாள் கூலியில் வடிவாக சாப்பிட முடிந்தது.

சீமெந்து இரண்டாயிரம் ரூபாயும் பெற்றோல் எண்ணூறு ரூபாவுக்கும் விற்கும் போது அரிசி முப்பது ரூபாவுக்கும் தேங்காய் இருபது ரூபாவுக்கும் மேல் விலையேறாது பேணியிருந்தார்கள்.

மக்களால் தாங்க முடியாத பொருளாதார தடையை இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஏற்படுத்தியிருந்த போதும் அதனை இலகுவாக அவர்கள் எதிர்கொண்டிருந்தனர்.

இராணுவ கட்டுப்பாட்டுக்குள் தேங்காய்களை கொண்டு செல்ல அனுமதித்த புலிகளின் நிர்வாகம் தேங்காயின் கேள்வி அதிகரிக்கும் போது நுகர்வுக்கான தேங்காயின் விலையை கட்டுக்குள் பேணுவதற்காக வெளியே (இராணுவ கட்டுப்பாட்டுக்குள்) கொண்டு செல்லும் தேங்காயின் எண்ணிக்கையை குறைத்து விடுவார்கள் என தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

இலங்கையில் உச்சம் தொடும் மரக்கறி: நுகர்வைக் குறைக்கும் பொதுமக்கள் - செய்திகளின் தொகுப்பு

இலங்கையில் உச்சம் தொடும் மரக்கறி: நுகர்வைக் குறைக்கும் பொதுமக்கள் - செய்திகளின் தொகுப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வாழைச்சேனை, Toronto, Canada

10 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US