மட்டக்களப்பில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்
மட்டக்களப்பு (Batticaloa) - வாழைச்சேனையிலுள்ள வாகனேரி காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது, இன்று (29.04.2024) காலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு (Colombo) பிரதான வீதிக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளது.
வாகனேரி காட்டுப் பகுதியிலுள்ள மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டதை பொதுமக்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தில் சடலம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதன் காரணமாக அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri