பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை - உலக செய்திகளின் தொகுப்பு (Video)
அடுத்துவரும் 3 நாட்களுக்கு பிரித்தானியாவில் பனி அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
பிரித்தானியாவில் பெரும்பாலான பகுதிகளுக்குப் பனி தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கைகள் விடுத்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம், அந்த எச்சரிக்கைகள் இந்த வாரத்தின் நடுப்பகுதி வரை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் அதிக குளிர்ச்சியான வெப்பநிலையை நாடு சந்திக்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு...