யாழில் 9ஆவது சர்வதேச யோகா தின செயற்றிட்டம் முன்னெடுப்பு (Photos)
ஒன்பதாவது சர்வதேச யோகா தின நிகழ்வு யாழ்ப்பாணம் - இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இன்று (21.06.2023) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட யோகா தின நிகழ்வில் யோகா பயிற்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
யோகா பயிற்சி முன்னெடுப்பு
குறித்த நிகழ்வில் யாழ். மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா,வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம், யாழ்ப்பாண படைகளின் கட்டளைத் தளபதி ஹெட்டியாராச்சி, யாழ். இந்திய துணை தூதரக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை யோகா பயிற்சி நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் மற்றும் கல்வியிலாளர்கள், ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |










முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
