யாழில் சோகம்: கிணற்றில் விழுந்து உயிரிழந்த மூதாட்டி
யாழில் 96 வயதான மூதாட்டி ஒருவர் கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(04.01.2024) இடம்பெற்றுள்ளது.
இதன் போது அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் தங்கம்மா என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த மூதாட்டி கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு முயன்றவேளை கிணற்றினுள் விழுந்தது உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |