தமிழ்நாட்டு அகதிகள் முகாமில் இருந்து தப்பி நெடுந்தீவு கடலிற்கு வந்த ஈழ அகதிகள்
தமிழ்நாட்டில் (Tamil Nadu) மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருந்த திருகோணமலை, மன்னார் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒன்பது பேர் சட்டவிரோதமாக நாட்டுப்படகில் இலங்கை வந்தடைந்துள்ளனர்.
குறித்த நபர்கள், நேற்று மாலை புறப்பட்டு இன்று (10) அதிகாலை நெடுந்தீவு அருகே கரை இறங்கியுள்ளனர்.
உடல் பரிசோதனை
இந்நிலையில், இவர்கள் குறித்து தகவல் அறிந்த நெடுந்தீவு அரசு அலுவலர்கள், அவர்களை மாவிலித்துறை பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் தங்க வைத்துள்ளனர்.

மேலும், அவர்களுக்கு நெடுந்தீவு அரசு மருத்துவமனையில் முதலுதவி மற்றும் உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், நடுக்கடலில் இருநாட்டு கடற்படை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாட்டுப்படகில் இலங்கைத் தமிழர்கள் தப்பி வந்துள்ள சம்பவம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மட்டத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய இந்தியா News Lankasri
'வித் லவ்' படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சொன்ன விமர்சனம்.. படம் எப்படி வந்துள்ளது தெரியுமா Cineulagam
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan