சூடானில் மேற்கொள்ளப்பட்ட திடீர் வான்வழித் தாக்குதலில் 9 குழந்தைகள் பலி
சூடானில்(Sudan) இராணுவம் மற்றும் துணை இராணுவத்தினர் இடையே அதிகார போட்டி காரணமாக உள்நாட்டு போர் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் மேற்கு சூடானில் உள்ள டார்பூர் மாகாணம் எல்பேஷர் என்ற இடத்தில் துணை இராணுவ படையினர் மேற்கொண்ட திடீர் வான் வழித்தாக்குதலில் 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததோடு 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பசி, பட்டினியால் வாடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |