தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய மேலும் 85 பேர் கைது
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 80475 ஆக இருந்த நிலையில் தற்போது 80560 ஆக உயர்வடைந்துள்ளது.
நாட்டில் கோவிட் தொற்று பரவல் காரணமாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு சுகாதார தரப்பினர் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
அதன்படி பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் என்பன தொடர்பில் தொடர்ச்சியாக மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் பொலிஸாரும் தீவிரமாக கண்காணித்து வரும் போதும் தொடர்ச்சியாக சிலர் அசமந்த போக்குடன் செயற்படும் நிலையிலேயே கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
