இலங்கையில் இருந்து பெருமளவு வெளிநாட்டவர்கள் இன்று நாடு கடத்தல்
இலங்கையில் கைது செய்யப்பட்ட 85 சீனப் பிரஜைகள் இன்று காலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தங்கியிருந்த போது சைபர் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 85 சீனப் பிரஜைகள், நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்த சீனப் பிரஜைகள் 05 பேருந்துகளில் ஏற்றப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, கடுமையான பாதுகாப்பின் கீழ் விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அதிகாரிகள்
85 பொலிஸ் அதிகாரிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த சீனப் பிரஜைகளுடன் விமானம் பயணித்தனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் UL-880 என்ற சிறப்பு விமானம் இன்று அதிகாலை 01.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சீனாவின் குவாங்சோவுக்கு புறப்பட்டதை விமான நிலைய பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தினார்.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri