24 மணித்தியாலங்களில் 81 பேர் கைது! 337 பேருக்கு எச்சரிக்கை!!
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்று காரணமாக சுகாதார அமைச்சு பல சட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. சட்ட விதிமுறைகளை மீறும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற பொழுதும் மக்கள் அதனை பொருட்படுத்தாது உள்ளனர்.
இதற்கமைவாக தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்துக்கு உள்நுழையும் மற்றும் வெளியேறும் 13 இடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிப் பயணித்த 145 வாகனங்களில் வந்த 337 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri