சிறைகளிலுள்ள கைதிகளில் 80 வீதமானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்: விஜயதாஸ ராஜபக்ச
இலங்கையில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் 80 வீதமானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (22.11.2022) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் உள்ள சிறைகளில் தற்போது 26000 கைதிகள் உள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப்பொருள் பாவனை
இவர்களில் 80 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

