மற்றுமொரு பண மோசடி: நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு
ஜப்பானில் இருந்து பிராடோ ரக வாகனமொன்றை இறக்குமதிசெய்து தருவதாக தெரிவித்து, 80 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த அருட்தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விளக்கமறியல் நீடிப்பு
சந்தேகநபரான அருட்தந்தை நேற்று (09.11.2022) கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது எதிர்வரும் 22ஆம் திகதி வரை சந்தேகநபரான அருட்தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பணம் வழங்கியதற்கான ஆவணம்
ஷியாமலி சமரநாயக்க என்ற பெண்ணுக்கு தமது சேவை பெறுநர் இந்தப் பணத்தை வழங்கியுள்ளதாகவும், அப்பெண் பல கோடி ரூபா மோசடி செய்த வழக்கில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் அருட்தந்தையின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
இந்த பெண்ணுக்கு பணம் வழங்கியதற்கான ஆவணத்தை முன்வைக்க முடியுமா என சந்தேகநபரான அருட்தந்தையிடம் நீதவான் வினவியுள்ளார்.
எனினும்,அவ்வாறான ஆவணத்தை அவரது தரப்பினர் முன்வைக்கவில்லை. இந்த நிலையில் அருட்தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.




