தாயுடன் சென்ற 8 வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்
மாத்தறையில் (Matara) முச்சக்கரவண்டியில் பயணித்த 8 வயது குழந்தையொன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.
மாத்தறை, தங்காலை பிரதான வீதியின் உடதெனிய பகுதியில் நேற்று (04) காலை டிப்பர் வாகனமும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியின் பின் இருக்கையில் பயணித்த தாய் மற்றும் அவரது மகன் ஆகியோர் படுகாயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்பின்னர் துரதிர்ஷ்டவசமாக 8 வயதுடைய குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் கைது
இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் முச்சக்கர வண்டி சாரதி வைத்தியசாலையை விட்டு வெளியேறிய நிலையில் பொலிஸாரரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
