மட்டக்களப்பு - வவுணதீவில் குளவி தாக்குதல்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி (Photos)
மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்தில் பாடசாலைக்கு வீதியால் சென்ற மாணவர்கள் மீது பனை மரத்தில் இருந்த குளவி தாக்குதலில் 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தாண்டியடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று புன்கிழமை (08.11.2023) காலை 7 மணியளில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
வவுணதீவு - கன்னங்குடா மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்கள் சம்பவதினமான இன்று காலை 7.00 மணியவில் வீதியால் நடந்து சென்ற நிலையில், குறிஞ்சாமுனை பகுதியில் வீதிக்கு அருகிலுள்ள பனைமரத்தில் கூடுகட்டியுள்ள குளவிகள் மாணவர்கள் மீது குத்தி தாக்கியது.

இதனால் 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட
நிலையில் அருகிலுள்ள தாண்டியடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பனை மரங்களில் இருந்து குளவிக் கூடுகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 15 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan