யாழில் சீமெந்து தொழிற்சாலையில் கைவரிசையை காட்டிய 8 பேர் கைது (photos)
யாழ். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையிலிருந்து 780 கிலோ இரும்பைத் திருடிய குற்றச்சாட்டில் 8 பேர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை நேற்று (14.05.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு உடந்தையாக உதவிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 3 பேரும், வாகனம் ஒன்றில் இரும்புகளை வெட்டி ஏற்றிச் செல்லத் தயாராகவிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில், சான்றுப் பொருட்களுடன் பாரப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
