8 பில்லியன் ரூபாய்கள் வரி நிலுவை: உரிமங்களை இழக்கப்போகும் மது உற்பத்தி நிறுவனங்கள்
டபிள்யூ. எம். மென்டிஸ் அண்ட் கோ லிமிடெட் உள்ளிட்ட ஐந்து முன்னணி மதுபான உற்பத்தி நிறுவனங்கள், தமது மதுபான உற்பத்தி உரிமங்களை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024 நவம்பர் 30 ஆம் திகதிக்குள், குறித்த நிறுவனங்களின் 8.5 பில்லியன் திரட்டப்பட்ட வரி நிலுவைத் தொகை தீர்க்கப்படாவிட்டால் இந்த ஆபத்தை குறித்த நிறுவனங்கள் எதிர்கொள்ளக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செலுத்த வேண்டிய வரி
இந்த தொகையில் மெண்டிஸ் நிறுவனமே ஆகக்கூடிய 5.5 பில்லியன் ரூபாய் வரியை செலுத்த வேண்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

திறைசேரியின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து மதுவரித்திணைக்களம், இந்த மாத ஆரம்பத்தில், புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், நாட்டில் ஐந்து பெரிய அளவிலான மதுபானங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், இந்த மாத இறுதியில் தங்கள் வரி நிலுவைத் தொகையை தீர்க்கவேண்டும் என்று நினைவூட்டப்பட்டுள்ளது.

களுத்துறையின் சினெர்ஜி டிஸ்டில்லரிகள், குருணாகலயின்; வயம்ப டிஸ்டில்லரிகள், பின்லாந்து டிஸ்டில்லரீஸ், ஹிங்குரானா டிஸ்டில்லரீஸ் லிமிடெட் மற்றும் டபிள்யூ. எம். மென்டிஸ் அண்ட் கோ என்பனவே இந்த நிறுவனங்களாகும்.
முன்னதாக ஆறாவது உற்பத்தியாளரான ரன்தெனிகல டிஸ்டில்லரிகளில் லங்கா (பிரைவேட்) லிமிடெட் அண்மையில் மதுவரித்திணைக்களத்துக்கு தமது நிலுவைத் தொகையை செலுத்தியுள்ளது.
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri