டித்வா புரட்டிப் போட்ட 700இற்கும் மேற்பட்ட மதஸ்தலங்கள்
டித்வா சூறாவளியால் 764 மதஸ்தலங்கள் பகுதியளவு அல்லது முழுமையாக சேதமடைந்துள்ளதாக பௌத்த, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவி இன்று தெரிவித்தார். இதில் மும்மதஸ்தலங்களும் அடங்கியுள்ளன.
379 விகாரைகள், 165 கோவில்கள், 63 கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் 157 பள்ளிவாசல்கள் சேதமடைந்துள்ளன. பேரிடர் சூழ்நிலை காரணமாக பல மாவட்டங்களில் 18 கலாசார மையங்களும் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மீளமைக்கும் பணிகள்
அனைத்து மதஸ்தலங்களையும் புதுப்பித்து மீட்டெடுக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என்றும், இது பல கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன. சுத்தம் செய்தல் மற்றும் மத சடங்குகளைத் தொடங்குவதற்கு அரசாங்கம் ரூ. 25,000 முதற்கட்டமாக வழங்கவுள்ளது.

பகுதியளவு சேதமடைந்த மதத் தலங்களுக்கான மதிப்பீடுகள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளன.
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri