டித்வா புரட்டிப் போட்ட 700இற்கும் மேற்பட்ட மதஸ்தலங்கள்
டித்வா சூறாவளியால் 764 மதஸ்தலங்கள் பகுதியளவு அல்லது முழுமையாக சேதமடைந்துள்ளதாக பௌத்த, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவி இன்று தெரிவித்தார். இதில் மும்மதஸ்தலங்களும் அடங்கியுள்ளன.
379 விகாரைகள், 165 கோவில்கள், 63 கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் 157 பள்ளிவாசல்கள் சேதமடைந்துள்ளன. பேரிடர் சூழ்நிலை காரணமாக பல மாவட்டங்களில் 18 கலாசார மையங்களும் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மீளமைக்கும் பணிகள்
அனைத்து மதஸ்தலங்களையும் புதுப்பித்து மீட்டெடுக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என்றும், இது பல கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன. சுத்தம் செய்தல் மற்றும் மத சடங்குகளைத் தொடங்குவதற்கு அரசாங்கம் ரூ. 25,000 முதற்கட்டமாக வழங்கவுள்ளது.

பகுதியளவு சேதமடைந்த மதத் தலங்களுக்கான மதிப்பீடுகள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளன.
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri