அரச பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள 75ஆயிரம் வாகன அனுமதிப்பத்திரங்கள்
கடந்த 5 வருடங்களாக அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 75,000 வாகன அனுமதிப்பத்திரங்களில் இன்னும் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவில்லை. இது குறித்து சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் நன்கொடையாளர் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் குறித்த அனுமதிப்பத்திரங்களில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவார் என அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நிதித் தேவைகள்
அரச ஊழியர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சம்பள விகிதங்கள் கிடைப்பதால் அவர்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.

இந்தநிலையில் அவர்களில் பெருமளவானோர் வாகனங்களை கொள்வனவு செய்வதாகவும் அல்லது அவர்களது நிதித் தேவைகளுக்காக அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri