களுத்துறை மாவட்டத்தில் மூன்று பொலிஸ் பிரிவுகளில் 75 கொரோனா தொற்றாளர்கள்
களுத்துறை மாவட்டத்தில் மூன்று பொலிஸ் பிரிவுகளில் திடீரென மேற்கொள்ளப்பட்ட உடனடியான ரெபீட் அன்டிஜன் பரிசோதனையில் 75 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முடிவடைந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 703 பேருக்கு உடனடியான ரெபீட் அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
அளுத்கமை பொலிஸ் பிரிவில் காலி வீதியில் 18 முறை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் ஆயிரத்து 894 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் தர்கா நகரில் 254 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
பேருவளை நகர் மற்றும் மீன்பிடி துறைமுக பகுதிகளில் 265 பேருக்கு இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் பயாகல பொலிஸ் பிரிவில் மக்கொன அக்கர மலே பிரதேசத்தில் 290 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் பேருவளை பிரதேச செயலாளர் சத்துர மல்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.





சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
