பசறையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 73 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பசறை தேசிய பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு ஒத்திகையின் போது குளவிக் கொட்டுக்கு இலக்கான 73 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பசறை தேசிய பாடசாலையின் வருடாந்த இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையிலே நேற்று(20.02.2024) பசறை உள்ளூராட்சி மன்ற விளையாட்டு மைதானத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
அதன் போது மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கானதாகவும், கடுமையான கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பசறை பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த மாணவர்களில் 18 மாணவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எஞ்சிய மாணவர்கள் வைத்தியசாலையிலிருந்து வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் பசறை பொலிஸ் தரப்பில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri
