அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 701 பேர் இதுவரை கைது
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குப் படகு மூலம் செல்ல முயற்சித்த 701 பேர் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படை தெரிவித்துள்ளது.
அதேநேரம், அவுஸ்திரேலியா செல்வதற்கான தயார்ப்படுத்தல்களில் ஈடுபட்ட 210 பேர், நாட்டின் சில பாகங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா ஊடகங்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சட்டவிரோதமாக இந்தியா செல்ல முற்பட்ட 113 பேர் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியா சென்றுள்ள மேலும் நால்வர் |
இதேவேளை, இலங்கை கடற்படை, கடந்த ஆண்டு 2021 இல் மாத்திரம் 9,231 இந்திய மீனவர் படகுகளை இலங்கை கடற்பரப்பில்,கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மொத்தமாக கண்டறியப்பட்ட இந்திய மீனவர் படகுகளில் 0.21 சதவீதமானவையாகும்.
இந்த 19 படகுகளில் இருந்து மொத்தம் 157 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.